Wednesday, January 17, 2018

அடுத்து யாரோ ?

முன்பெல்லாம் தன்னைச் சமூகம்
திரும்பிப் பார்க்கும்படிச் செய்ய வேண்டுமெனில்
சமூகம் கவனித்து இரசிக்கும்படியாக 
இதுவரை யாரும் சொல்லிச் செல்லாத ஒன்றை
மிக அழகாக சொல்லிச் செல்வார்கள்

இப்போதெல்லாம் சமூகம் தன்னைக்
கவனிக்க வேண்டுமெனில் ஒரு நல்ல
சங்கீதக் கச்சேரிக்கிடையில் தகரத்தைத்
தட்டுபவன் போல்

சமூகமே எரிச்சலடையும்படியாக
சமூக அமைதியைக் கெடுக்கும்படியாக
ஏதேனும் ஒன்றை வாந்தி எடுத்துப் போகிறார்கள்

முதலில் வைரமுத்து, பின் ராஜா
இப்போது நைனார் நாகேந்திரன்
அடுத்து யாரோ ?

4 comments:

KILLERGEE Devakottai said...

நைனார் நாகேந்திரன் இன்று உலகறியப்பட்டது இப்படி சொன்னதால்தானே...? ஆகவே இனி எவனும் எதையும் சொல்வான் பிரபலமாக...

ஸ்ரீராம். said...

இனி இது தொடரும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சமூகம் அந்த அளவிற்கு ஆகியுள்ளது.

Avargal Unmaigal said...

அடுத்தது நம் தமிழ் சமுகம்தான்

Post a Comment