Wednesday, February 1, 2017

ஜல்லிக்கட்டு.. ...போராட்டமும் முடிவும்

காலங்காலமாய்
துவக்கி வைத்துக் கொண்டிருந்தவர்கள்
அல்லது துவக்குவதாய்
நடித்துக் கொண்டிருந்தவர்கள்
அறியாமலேயே
இது துவங்கி இருந்தது

அவர்கள் அதிர்ச்சியுடன்
அதை எட்ட நின்றுக்
கவனித்துக்கொண்டிருந்தார்கள்

காலங்காலமாய்
தொடர்ந்து கொண்டிருந்தவ்ர்கள்
அல்லது
தொடர்பவர்களாக
நடித்துக் கொண்டிருந்தவர்கள்
தொடராமலேயே
அது மிகச் சிறப்பாய்த்
தொடர்ந்து கொண்டிருந்தது

அவர்கள் மிரட்சியுடன்
அதைக் கவனமாய்க்
கவனிக்கத் துவங்கினார்கள்

காலங்காலமாய்
வென்று கொண்டிருந்தவர்கள்
அல்லது
வென்றதாக நடித்துக் கொண்டிருந்தவர்கள்
இல்லாமலேயே
அது வெல்லத் துவங்கி இருந்தது

அவர்கள் அதிர்ச்சியுடன்
அது குறித்துச்
சிந்திக்கத் துவங்கினார்கள்

துவங்குவதும்
தொடர்வதும்
வெல்வதும்
சுயம்புவாய் ஆகக் கூடுமெனில்
நம் நிலை என்ன என்பது
அவர்களுக்குள்
ஒரு எரிமலையை உருவாக்க

அவர்கள் மீண்டும்
வழக்கம்போல
மெல்ல மெல்லத் துவங்கி
மெல்ல மெல்லத் தொடர்ந்து
முடிவாய்
வழக்கம்போல
முடித்தும் வைத்துவிட்டார்கள்

வழக்கமான
ஒரு போராட்டம் என்பதைப் போலவே

ஆயினும்........

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நேர்ந்த வலிகள் அதிகம்...

G.M Balasubramaniam said...

தேவையற்ற களேபரங்கள் என்று நினைக்க வைத்தது

வெங்கட் நாகராஜ் said...

வழக்கம் போல முடித்து வைத்தார்கள்..... :(

Post a Comment