Sunday, December 4, 2016

இயற்கையதன் சுகம்யாவும் யாவருக்கும் வசமாகும்

மலரோடு உறவாடி
மகிழ்வோடு வலம்போகும்
நிலவோடு உறவாட
நினைவெல்லாம் பூமணக்கும்

கரையோடு தினம்கூடி
களிப்போடு சதிராடும்
அலையோடு நினைவோட
நுரைபொங்கும் மனமெங்கும்

மலையரசன் உடல்தழுவி
மதிமயங்கித் தரைநழுவும்
குளிரருவி நிலையுணர
மனமாகும் குற்றாலம்

தண்மலரைக் கூடிமனக்
களிப்போடு உலாப் போகும்
வண்டினத்தின் சுகமறிய
மனம்கொள்ளும் ரீங்காரம்

இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் வசமாகும்

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் வசமாகும்//

அழகாகச் சொல்லி முடித்துள்ளார்கள். :)

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் ஐயா...

கோமதி அரசு said...

இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் வசமாகும்//

இயற்கை அழகும் அதை ரசிக்கும் மனமும் இருந்தால் எல்லாம் சுகமே!

G.M Balasubramaniam said...

சந்தத்துடன் வரிகள் நன்று

வெங்கட் நாகராஜ் said...

அருமை.....

Thulasidharan V Thillaiakathu said...

வாவ்!!! அருமை அருமை...இயற்கையை ரசிக்கத் தெரிந்துவிட்டால் இளமையுடன் இருந்திடலாம்!!

Post a Comment