Wednesday, March 2, 2016

கேப்டன் விஜயகாந்த் என்ன முடிவு செய்யலாம் ? (2 )

lhttp://yaathoramani.blogspot.in/2016/03/blog-post.html
மேலே  உள்ள முந்தைய பதிவில் முடித்தபடி
கேப்டன் விஜயகாந்த அவர்களுக்கு
இரண்டு வழிகள் தான் மீதம் உள்ளது

முதல் வழி.. தனித்துப் போட்டியிடுவது..

இதற்கு முன்பு தனித்து போட்டியிட்ட போது
இருந்த சூழல் நிச்சயமாக இப்போது இல்லை

அப்போதுஅவர் மேல இருந்த கதாநாயக அந்தஸ்துக்
கொஞ்சம் குறைந்துள்ளது
அவர் குறித்த வாட்ஸ் அப் மற்றும் முக நூல்களில்
அவர் குறித்தான பதிவுகளிலேயே தெரிந்து
கொள்ளலாம்

எனவே தனியாகப் போட்டியிடுவார் எனில்
நிச்சயம் இதற்கு முன்பு தனித்துப் போட்டியிட்டுப்
பெற்ற சதவீதத்தை விடக் குறைவாகத்தான்
வாக்குகள் பெறுவார். அது நிச்சயம் அவருடைய
அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குரியாதாகவே
ஆக்கிச் செல்லும்

எனவே தனித்துப் போட்டியிடுவது அவ்வளவு
உசிதமானது இல்லை

கடைசியாக உள்ள ஒரு வழி
பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைந்துப்
போட்டியிடுவதுதான்

இதில் அவருக்கான பாதக அம்சம்
மதவாதக் கட்சியுடன் இணைந்துவிட்டார்
என எல்லோரும் கூச்சலிடுவார்கள்
அது ஒன்றுதான்

அதுவும் இப்போது செல்லுபடியாகாது

காரணம் இங்குள்ள அனைத்துப் பிரதான
கட்சிகளுமே ஒவ்வொரு காலகட்டத்தில்
அந்தக் கட்சியுடன் சேர்ந்தே
போட்டியிட்டுள்ளார்கள்

சாதகமான விஷயம்...

முதலில் பாதுகாப்பு.

ஆளுங்கட்சியின் அதீத அதிகார துஸ்பிரயோகம்
ஏதுமிருப்பின் அதனைத்  
தாங்கும் சக்தி தி.மு.க வுக்கு உண்டு

நால்வர் அணியினை அதிகம் சீண்டி
அதனை முன்னணிக்கு கொண்டுவரும் தவறினை
நிச்சயம் அதிமுக செய்யாது.

நிச்சயமாக வேண்டுமென்றே தேமுதிக வை
பிரதான எதிரிபோல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும்
முயற்சியிலேயே ஆளுங்கட்சி  ஈடுபடும்

அதனால் ஏற்படும் விளைவுகளைச்
சந்திக்க மத்தியில் ஆளும் ஒரு கட்சியின்
துணையிருப்பின் அது ஒரு
பாதுகாப்பாகத்தான் இருக்கும்

மிகச் சிலத் தொகுதியிலேயே இந்தக் கூட்டணி
வெல்ல முடியும் ஆயினும் அந்த வெற்றி
மத்திய ஆளுங்கட்சியின் கூட்டணி என்கிற வகையில்
கூடுதல் முக்கியத்துவம் பெறும்

அவசியமெனில் அடுத்து  வரும் ராஜ்யசபா
தேர்வினில் தனது கட்சிக்காக ஒன்று அல்லது
இரண்டு இடங்களைப் பெற்று கட்சியின்
எல்லையை விர்வுப்படுத்த முடியும்.

தி.மு.க மற்றும் காங்கிரஸ்ஸுடன் சேருவதன் மூலம்
கிடைக்கும் வேறு வகையான ஆதாயங்கள்
நிச்சயம் பி.ஜே.பி.யுடன் சேருவதன் மூலமும்
குறைவின்றியே கிடைக்கும்

எனவே... இன்றைய சூழலில்..
தே.மு தி..கவுக்கு பி.ஜே பி யுடன் கூட்டணி
வைத்தல் ஒன்றே நிச்சயம் புத்திசாலித்தனமான
முடிவாக இருக்கும்.

இதன் படி தே.மு..தி க. இப்படி முடிவெடுப்பது
அந்தக் கட்சிக்கு நல்லது.சரி

மக்கள் எப்படி முடிவெடுப்பது அவர்களுக்கு
நல்லது..அது....

அடுத்த கட்டுரையில்

6 comments:

ஸ்ரீராம். said...

தி மு க வுடன் 59 தொகுதிகள் என்று உடன்பாடு எட்டி விட்டதாக கொஞ்ச நேரமாக ஒரே வதந்தி!

Yaathoramani.blogspot.com said...

உண்மையில் நாளை இந்தப்
பதிவை வெளியிடலாம் என இருந்தேன்
இப்படி ஏதேனும் முடிவு அறிவிப்பு வரும் முன்பு
எழுதுவதே சரியாக இருக்கும் எனக் கருதியே
இன்று எழுதினேன்

உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

நிஷா said...

அப்படியா?

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அலசல். யார் யாருடன் கூட்டு வைத்தாலும் மக்களுக்கு நல்லது செய்யப்போகும் அரசியல்வாதி யார் என்பதே பெரும் கேள்விக்குறி!

Avargal Unmaigal said...

தேர்தலுக்கு பின் காமெடி வடிவேலு மாதிரி காமெடி விஜயகாந்தும் காணாமல் போகலாம் அல்லது தன் கட்சியை பிஜேபி கூட நிரந்தரமாக இணைத்து கொள்ளலாம்

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல அலசல்தான் குரு...

திமுக'வுடன் கூட்டணி வைக்காவிட்டால் தேமுதிக கட்சி என்பது பாமக மாதிரி ஆகிவிடும், கட்சிகாரங்க ரொம்பபேர் கானாமப்போயிருவாங்க.

Post a Comment